×

ஆட்டோ மீது பைக் உரசியதால் தகராறு பள்ளி மாணவர்கள் தாக்கியதில் பாஜ பிரமுகர் பரிதாப சாவு

செங்கல்பட்டு, செப்.25: செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, காலாண்டு தேர்வு முடிந்ததும் ஒரே பைக்கில் அதே பகுதியில் உள்ள கோகுலாபுரத்துக்கு புறப்பட்டனர்.செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரியை சேர்ந்தவர் திலீப்குமார் (38). ஆட்டோ டிரைவர். முன்னாள் பாஜ நகர துணை தலைவர். நேற்று முன்தினம் சவாரிக்கு சென்றுவிட்டு, 3 மாணவர்கள் செல்லும் சாலையில், எதிரே வந்து கொண்டிருந்தார்.  அப்போது, ஆட்டோ மீது, மாணவர்கள் சென்ற பைக் லேசாக உரசியது. இதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது.

இதனால் திலீப்குமார், 3 மாணவர்களையும் தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த 3 மாணவர்களும், அவரை திருப்பி தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவர்கள், அந்த ஆட்டோவை எடுத்து கொண்டு, செங்கல்பட்டு அடுத்த  ஆலப்பாக்கத்தில் நிறுத்திவிட்டு சென்றனர்.தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த திலீப்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப்குமார், பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 மாணவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர்.

Tags : Baja Pramukh Paritabha ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...